திருவள்ளுவரை வைத்து மதவாதிகளும் அரசியல்வாதிகளும் கலகம் செய்துகொண்டிருக்கையில் , அவர் எக்காலத்திற்கும் ஏற்ற பல குறள்களை எழுதி சென்றுள்ளார், அதில் ஒன்றிரண்டை படித்து பார்த்து அதன் படி நடக்க வேண்டும் என்று மன உறுதி கொண்டு தேடும் போது இன்றைய corporate உலகத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு குறள் கண்ணில் பட்டது , அந்த குறள் எந்த குறள் அதன் பொருள் என்ன என்று பார்ப்போம்.
திருக்குறளில் MANAGEMENT
அதற்கு அச்சாரமாக ஒரு குறளையாவது நண்பர்களுடன் பகிர்ந்து விடுவது என்று Leadership அதிகாரத்துக்குப் போனேன். எங்கய்யா இருக்கு அந்த அதிகாரம் என்கிறீர்களா? இறைமாட்சி.
முதல் குறளே ஒரு புத்தகம் எழுதும் அளவுக்குச் செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது. இயன்றவரை சுருக்கமாய்த் தர முயல்கிறேன்.
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
கொஞ்ச நேரம் ராஜா மந்திரி கோட்டை எல்லாம் மறந்து விடுங்கள்.
படை = Task force அல்லது Trouble Shooters : எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்தாலும், Failure Mode Effect Analysis எல்லாம் செய்தாலும் Crisis வரத்தான் வரும். அந்த Crisis களை எதிர்கொள்ளும் திறன் மிக்க ஒரு Team இருத்தல் வேண்டும்.
குடி = Team. மக்கள் என்பதும் குடி என்பதும் வேறுபட்டவை. மக்கள் எல்லோரையும் குறிக்கும். இறையாண்மையை மதிக்கும் பொறுப்பான Citizen கள்தான் குடி. Department இன் இலக்கை உணர்ந்து அதற்காக வேலை செய்யும் Subordinate கள். வெறும் Group ஆக இல்லாமல் Team ஆக இருத்தல்.
கூழ் = Funds தன் Department க்கு Management ஐ சமாதானம் செய்து Funds பெறும் வல்லமை வேண்டும். Budget ல Maintenance க்கு Allocation இல்லைப்பா. மீதம் இருந்தா பாக்கலாம், என்கிற மாதிரி பேச்சுக்கள் வராதவாறு பார்த்துக் கொள்தல்.
அமைச்சு = Advisors, People who can substitute boss in his absence. தான் இல்லாத போது டிபார்ட்மெண்ட் ஐ திறம்பட நிர்வகிக்கும் நம்பர் டூக்கள்.
நட்பு = Cordial relationship with other departments. தானும் தன் டீமும் ஒரு தீவாக செயல்படாமல் இதர துறைகளுடன் நட்பாய் இருப்பது.
அரண் = Cultivating Integrity நிறுவனங்களில் பெரிய பிரச்சினையே அடுத்த டிபார்ட்மெண்ட் ஆசாமிகள் வந்து ‘உங்க பாஸ் இருக்கானே…’ என்று ஆரம்பித்து அவதூறு பரப்புதல். அப்படி யாராவது சொல்லும் போது ‘I know my boss you get lost’ என்று Subordinate கள் சொல்லும்படியான கலாச்சாரத்தை விதைத்தல். National integrity போல Department Integrity.
கொஞ்சம் விரிவாக உதாரணங்களுடன் எழுதினால் ஏறக் குறைய ஒரு புஸ்தகம் அளவுக்கு ஆகிவிடும் என்பது சரிதானே?
No comments:
Post a Comment