வளைகாப்பு வாழ்த்து
நண்பர் ராம்மோகன் என்பவர் தன்னுடைய மனைவி சாருமதி அவர்களின் வளைகாப்பு விழாவிற்கு வாழ்த்து ஒன்று என்னையும் கவிஞனாக கருதி எழுதி தரும்படி கேட்டார். நானும் கவிஞன் ஆகிற முயற்சியில் எதாவது கிறுக்கலாம் என்று பின்வருமாறு எழுதி கொடுத்தேன். படிப்பவர்கள் குற்றம் குறை இருந்தால் மன்னிக்கவும்.
பிறைமதி, நெற்றி நிறைய குங்குமம்!
வான்மதி, முகம் நிறைய ஆனந்தம் !
முழுமதி, வயிறு நிறைய பிள்ளை!
அறிவுமதி ஆன அழகான மழலை!
வெண்மதி, மனம் நிறைய மகிழ்ச்சி!
நிம்மதி வேண்டும் தாயும் சேயும் நலமாக!
சிறு மதி சிறப்பாக வளர்ந்து!
பெரு மதி ஆக பார் போற்ற வாழ்ந்து!
சாரு மதி மனம் பொங்கிட வேண்டும்!
வாழிய வாழியவே!